ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலைச் சேர்ந்த மௌலவி சித்தீக் ஹஸனி ஹஸரத் அவர்கள் காலமானார்.
புழுதிவயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி சித்தீக் ஹஸனி ஹஸரத் அவர்கள் இன்று (23) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் மர்ஹூம்களான அபூபக்கர் மற்றும் பாத்திமா பீவி அவர்களின் அன்பு மகனும் நஸ்லிஹா அவர்களின் அன்புக் கனவரும், அஸ்பக், முஸ்பிக், முஷர்ரப் ஆகியோரின் அன்புத் தந்தையும் ,மர்ஹுமா ஆயிஷா உம்மா மற்றும் உம்முநாச்சியா, மர்ஹூம்களானான ரஹுமானி உம்மா, மர்யம் பீவி , இஸ்மாஈல் ஆசிரியர் மற்றும் ஹஸனுல் பஸரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் றிஸ்னா முபாரக், டில்சானி ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இரவு 10:00 மணிக்கு புழுதிவயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்
மகன் அஸ்பக்
No comments