Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலைச் சேர்ந்த தஸ்லீம் மௌலவி அவர்கள் காலமானார்.

கல்பிட்டி வீதி, கரம்பை, புழுதிவயலில் வசித்து வந்தவரும், சமூக சேவையாளருமான தஸ்லீம் மௌலவி (42 வயது) அவர்கள்  இன்று (23) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார், ஹனீபா ஹாஜியார் மற்றும் மர்ஹுமா ஆமிலா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், பாத்திமா ரிஹானா அவர்களின் அன்புக் கணவரும், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி ஐனா மற்றும் தல்ஹா ஆகியோரின் அன்புத் தந்தையும், பட்டானி சாஹிபு ஜும்ஆ மஸ்ஜிதின் செயளாலரான ஸலாஹுதீன், அன்பாஸ், சஸினா, ரிஸ்லா ஆகியோரின் சகோதரரும், சியாஹுல் ஹஸன் மற்றும் ஹகீம் ஆகியோரின்  மைத்துனரும் ஆவார். 



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ்  பின்னர்  அறிவிக்கப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

புழுதிவயல் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை பேஷ்இமாம் முஸ்அப் - ஸாபிதி




No comments