JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பத்தளங்குண்டு தீவில் அவசர நோயாளி நபர் ஒருவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவதற்கு உதவிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பத்தளங்குண்டு தீவில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு கடற்படையினர் அடிப்படை முதலுதவி அளித்து, அவரைக் கற்பிட்டி ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன்படி கற்பிட்டி பத்தளங்குண்டு தீவில்  வியாழக்கிழமை ( 2026 செப்டம்பர் 17 ) இரவு, நோய்க்கு உள்ளான அந்த நோயாளி கடற்படைப் படகின் மூலம் இலங்கை கடற்படை விஜய நிறுவனத்தின் இறங்குதுறைக்கு கொண்டுவரப்பட்டு, அவசரமாக மேலதிக சிகிச்சைகளுக்காக கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீவு வாழ் மக்களின் மருத்துவ வசதிகள் உள்ளடங்கலான சமூக நலன்புரி சேவைகளை ஆற்றுவதில் கடற்படையினரின் நிரந்தர தயார்நிலையும் அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال