JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடற்படை வீரர் ஒருவரை நினைவுகூரும் வகையில் வடக்கில் பேருந்து தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை அரச கடற்படை மற்றும் இலங்கை கடற்படையில் லீடிங் சீமன் தரநிலையில் பணியாற்றிய, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணம் அவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 25) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.   

யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணம் அவர்கள், 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி இலங்கை அரச கடற்படையில் இணைந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை அரச கடற்படை மற்றும் இலங்கை கடற்படையில் வானொலி மின்நுட்ப மாலுமியாகப் பணியாற்றிய அவர், 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி காலமானார்.  

அதற்கமைய, மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணம் அவர்களின் நினைவாக அவரது குடும்ப உறவினர்களால் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம், வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு கடற்படைப கட்டளையின் பிரதிப் தளபதி ஆகியோரின் தலைமையில், வடக்கு கடற்படைப் கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் இவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال