(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் நகரின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஆல்ஃபா வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பல்வேறு நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சவால்களைக் கடந்து புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தலைமையில் புதிய நம்பிக்கையுடன் மீண்டும் செவ்வாய்க்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுளாளது
கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் காலக்கெடுவிற்கு முன்னுரிமை அளித்து, இந்தத் திட்டத்தைப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்.
புத்தளத்தின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைக் கல்லாக காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்தக்கு இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



