(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி அவர்களின் இறுதிக் கடமைகளில் பங்கேற்பதற்காக அந் நாட்டின் அழைப்பை ஏற்று, இலங்கையிலிருந்து விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (எம்.பி) ஆகியோர் தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர், அரச மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்விஜயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ.பசீஹா அஸ்மியும் இணைந்து கொண்டார்.
