(மர்சூக் எம்.சல்பி)
இந்திய தமிழ் நாட்டுக்கு இன்று (18) வியாழக்கிழமை முற்பகல் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வைத்து அய்மன் கலை, விஞ்ஞான மகளிர் கல்லூரி தாளாளரும், செயலாளருமான ஹபீபுல்லாஹ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே சாகுல் ஹமீது ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பேட்டியும் அளித்தார்.

