சுரேஷ் சலேக்கு மன அழுத்தம்!! தற்கொலை செய்து கொள்ள இடமுண்டு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சல்லேயின் உடல்நிலை குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சல்லே மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ அறிக்கைகள் காட்டுவதாகவும், மேலும் அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கை நாளைக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

No comments