Breaking News

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் :முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 16 வருட கம்பி!!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மொத்தமாக 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல், ஒவ்வொரு வழக்கிலும் நான்கு ஆண்டுகள் தண்டனையுடன் ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதித்தார். இத்தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லாட்டரி வாரியத்தின் தலைவராக இருந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பான வழக்கில் குணவர்தன குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.




No comments