Breaking News

கற்பிட்டி பிரதேச முன்னாள் காதி நீதிபதி கபீர் காலமானார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் எஸ்.ஏ.பீ.ஏ கபீர் திங்கட்கிழமை (04) அதிகாலை அன்னாரின் இல்லத்தில் வைத்து காலமானார் 


முன்னாள் காதி நீதிபதியாகவும் பள்ளிவாசல்துறை தபால் நிலையத்தின் தபால் விநியோஸ்தராகவும் 32 வருடங்கள் கடமையாற்றியதுடன் புத்தளம் மாவட்ட சமாதான நீதிவானாகவும் ஓய்வூதிய சங்கத்தின் தலைவராகவும் இருந்ததையும் குறிப்பிடத்தக்கது 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (04) பிற்பகல் 04 மணிக்கு பள்ளிவாசல்துறை ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.




No comments