கற்பிட்டி நரக்கள்ளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி நரக்கள்ளி சுதுபியாகம குடியிருப்பு பகுதியின் முன்புறமாக உள்ள இறால் வளர்ப்பு அணைக்கட்டிற்கு அருகாமையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி பல்வேறு கோணங்களில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தற்கொலையா? அல்லது கொலையா ? என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments