வாரியாபொல வீதியில் லொறி விபத்து இருவர் உயிரிழப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வாரியபொல கப்புத்தோட்ட வீதியில் நெலும்கனுவ கொலமுனுவோய பாலத்தில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த சாரதியும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை நிகழ்ந்ததாக கட்டுப்போட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர்கள் மிரிகமவில் உள்ள பல்லேவெல பகுதியைச் சேர்ந்த முறையே 63 மற்றும் 42 வயதை உடையவர்கள் என்பதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறி ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம பகுதிக்கு செங்கற்கள் ஏற்றி கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments