Breaking News

நாகர்கோவில் கடற்கரையில் சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்த 6 சந்தேக நபர்களைக் கைது செய்த கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில்  வெள்ளிக்கிழமை (10 )இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வந்த சுமார் ஆறு (06) நபர்களையும், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள், இரண்டு (02) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடட்படையினர் கைப்பற்றினர். 


அதன்படி, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடலோரப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேனி கடற்படை நிலையத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான சிறுபடகுகள் சோதனையிடப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த ஆறு (06) நபர்கள், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள் , இரண்டு (02) சிறுபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையின் காவலில் எடுக்கப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் காவலில் எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாண வெல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 23 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள் இருப்பு, சிறுபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.





No comments