Breaking News

மன்னாரில் இடம்பெற்ற அகில இலங்கை மீனவ அமைப்பின் கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் இவ்வருடத்திற்கான இரண்டாவது நிறைவேற்றுச் சபை கூட்டம் சனிக்கிழமை (11)  மன்னார் வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில்  நடைபெற்றது. 


இதில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையக மாகாணங்களின் மாவட்ட மற்றும் மாகாண பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தின்போது மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments