Breaking News

புத்தளத்தில் டித்வா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கான முதல் கட்ட கொடுப்பனவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


டித்வா புயலால் புத்தளம் பிரதேச செயலகத்தில்  முழுமையாக மற்றும் பகுதி அளவில் சேதமடைந்த 44 வீடுகளுக்கான முதல் கட்ட காசோலைகளை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (09) புத்தளம்  பிரதேச செயலாகத்தின் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.


இந்நிகழ்வில்  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகார அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் , புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹமட், புத்தளம் மாவட்ட அதிபர் சில்வா, புத்தளம் பிரதேச செயலாளர் புத்தளம் மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் டித்வா புயலால் புத்தளம் பிரதேச செயலகத்தில் முழுமையான மற்றும் பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளின் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.














No comments