JobVibe.lk - Sri Lanka Job Portal

அலிகாமெய்னியின் கொலை: தேசங்களின் இறைமைகளில் விழுந்த பாரிய பேரிடி! - ஈரானின் ஒருமைப்பாட்டுக்கு மக்கள் காங்கிரஸ் பூரண ஆதரவு

ஏகாபத்தியவாதிகள் ஈரான் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஈரான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;


ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலிகாமெய்னி கொல்லப்பட்ட விடயம் ஆழ்ந்த அதிர்ச்சியளித்துள்ளது. இந்த துயரமிகுந்த தருணத்தில், ஈரானியர்களுக்கு இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.


இந்தக் கொலையானது, தனிப்பட்ட ஒரு தலைவரினதோ அல்லது தளபதிகளதோ கொலைகளல்ல. தேசங்களின் ஆள்புல ஒருமைப்பாடு, தனித்துவம் மற்றும் நாடுகளின் இறைமைக்கு எதிரான தாக்குதலாகவே உள்ளது.


இதனால்,மத்தியகிழக்கு நாடுகள் எதிர்பாராத ஸ்திரத்தை இழந்துள்ளதுடன் பாரிய குழப்பத்திலும் மூழ்கியுள்ளன. சர்வதேச ஒழுங்கு விதிகளையும் சட்டத்தையும் மீறி  இக்கொடூரம் நடந்துள்ளது.


இந்நிலையில் தொடர்ந்தும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதா ல், மத்தியகிழக்கில் வன்முறைச்சூறாவளி  விஸ்வரூபமாடுகிறது. மட்டுமன்றி அங்குள்ள நாடுகள் பலவற்றை தீக்கிரையாகவும் இந்தக் கொந்தளிப்புகள் மாற்றியுள்ளன.சுதந்திர தேசத்தை இல்லாதொழிப்பதற் கான அப்பட்டமான அத்துமீறல்களே  இவை.இந்த அத்துமீறிய அராஜகங்கள் ஒருபோதும் நீதிக்கு முன்னால் நியாயப்படுத்த முடியாதவை.


ஒவ்வொரு நாடுகளதும் இறைமை மற்றும் ஒருமாப்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.எந்த நாடுகளும் சுதந்திர நாடொன்றில் அத்துமீறிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனநாயகக் கட்டமைப்பில் முறையாக கட்டமைக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில்,இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். மத்தியகிழக்கிலும் அமைதியே அவசியம்.இந்நாடுகளின் உரிமைகள் மற்றும் இறைமைகளும் பாதுகாக்கப்படுவதே அமைதிக்கு அடித்தளமிடும்.


ஆதரவு என்ற போர்வையில், எல்லாவற்றையும் அள்ளிச்செல்லும் கபட அரசியலுக்கு, மத்தியகிழக்கு மண்டியிடவும் கூடாது.உரிமைகள் களவாடப்படுவது மற்றும் இறைமைகள் அடிமைப்படுத்தப்படுவதற்கு  ஜனநாயகத்தில் இடமில்லை.எனவே,மத்தியகிழக்கில் தீவிரமடைந்துள்ள வன்முறைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகிறது.  


ஈரானின் ஒருமைப்பாடும் ஆள்புல எல்லைகளும் பாதுகாக்கப்படுவதற்கு எமது கட்சி பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.ஆக்கிரமிப்பு வெறித்தனம் மற்றும் படுகொலைகளால் சமாதானம்,ஸ்திரம் மற்றும் நியாயம் என்பவற்றை அடைந்திவிட  முடியாது.இவ்விடயத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் தௌிவுடன் செயற்பட வேண்டும். என்றார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال