புத்தளம் மாநகர சபை எல்லைக்குள் பிரத்தியேக உயர் தர வகுப்புக்கள் ஏப்ரல் 20க்கு பின் மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
2028ம் ஆண்டுக்கான உயர்தர பிரத்தியேக வகுப்புகளை புத்தளம் மாநகர எல்லைக்குள் .2026 ஏப்ரல் 20 ம் திகதிக்கு முன் ஆரம்பிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் நிறைவடைந்த க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பௌதீக மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்கான பிரத்தியேக மேலதிக வகுப்புகள் அதிக வியாபார போட்டித் தன்மை காரணமாக பரீட்சை முடிவடைந்த அடுத்த தினமே ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை பெற்றோர் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தி இருந்தது இதனைக் கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார்.

No comments