சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து திங்கட்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தில் மேற்கொண்ட ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய்தனர்.
அதன்படி, கொழும்பு துறைமுக காவல்துறையினருடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கொழும்பு துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் (01) விசாரணை செய்யப்பட்டார். அங்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபரும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.


No comments