JobVibe.lk - Sri Lanka Job Portal

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை. கலாநிதி இல்ஹாம் மரைக்கார்.

எம்.யூ.எம்.சனூன்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று சுயாதீனமான ஒரு நாடாக இலங்கை உருவெடுத்தது.


அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தின் 78 ஆண்டுகளை நாம் இன்று பெருமையுடன் நினைவுகூருகிறோம் என்று அமேசன் கேம்பஸ் மற்றும் அமேசன் கொலேஜ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்துள்ளார்.


78வது சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திரம் என்பது வெறும் உரிமை மட்டுமல்ல அது பொறுப்பு. ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையையும் நமக்கு நினைவூட்டும் ஒரு உயரிய பெறுமதியாகும்.


இந்நாளில், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து, அமைதி, நல்லிணக்கம், சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய இலக்குகளைக் கொண்டு நாட்டை முன்னேற்ற உறுதி எடுப்போம்.


கடந்த கால சவால்களை தைரியமாக எதிர்கொண்டு, எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த ஒரு வளமான இலங்கையை உருவாக்குவது நம் அனைவரின் பொது பொறுப்பாகும் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்..




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال