தெற்கு கடலில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர உதவிய கடற்படை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கையின் தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவர், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படைக் கப்பலால் அவசரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு திங்கட்கிழமை (19) காலை கடற்படையினரால் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
2025 டிசம்பர் 25, அன்று, காலி மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த ஏழு (07) மீனவர்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலான ‘சினுஷ’ (IMUL-A-2195GLE) இலங்கைக்கு தெற்கே நானூற்று எழுபத்து நான்கு (474) கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இருந்த மீனவர்களில் ஒருவர் கடுமையான மார்பு வலி காரணமாக மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டார். கடற்படை தலைமையகத்தை அன்மித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம், மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு உதவி வழங்குமாறு மீன்வள மற்றும் நீர்வளத் துறை விடுத்த கோரிக்கைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்ததுடன், கடற்படையினர் நோயாளிக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை (Tele Therapy) தொலைபேசி மூலம் வழங்கி, நோயாளியை அருகிலுள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வருமாறு அவருக்குத் தெரிவித்தனர், மேலும் நோயாளியை விரைவாக தரைக்குக் கொண்டு வர தெற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஒரு படகொன்றை கடல் பகுதிக்கு அனுப்பினர்.
அதன்படி, திங்கட்கிழமை (19) காலை காலி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் இருந்து ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்து, அடிப்படை முதலுதவி அளித்த பிறகு, மீனவர் உடனடியாக காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், கடற்படை தலைமையகத்தை அன்மித்து நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை தயாராக உள்ளது.





No comments