புத்தளத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஐ.எப்.எம். முன்பள்ளியின் 53 வது ஆண்டு நிறைவும் வருடாந்த கலை விழாவும்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்டு இயங்கும் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 53 வது ஆண்டு நிறைவு மற்றும் அதன் வருடாந்த கலை விழா செவ்வாய்க்கிழமை (30) புத்தளம் நுஃமான் வரவேற்பு மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றுது
புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கலை விழா நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் இரு குழுவினராக பிரிக்கப்பட்டு 28 மாணவர்களும் தமது திறமைகளை மேடையில் வெளிக்கொணர்தனர்
"நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை" என்பது இந்த வருட கலை விழாவின் தொனிப்பொருளாகும்.
நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் பெறுமதியான பரிசுகளோடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட், உறுப்பினர்களான ரனீஸ் பதுயூதீன், இசாம் மரைக்கார், இப்லால் அமீன், எம் டி.எம் சஹீல், சதா பாயிஸ், சித்தி சலீமா, நிலங்க தில்ஹானி, புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் நில்பான், தேசிய மக்கள் சக்தி புத்தளம் அமைப்பாளர் ஏ.எம் றியாஸ், புத்தளம் முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவி அமிதா எதிரிசிங்க முன்பள்ளியின் பழைய மாணவர்கள் அரசியல் பிரபலங்கள்,, புத்தி ஜீவிகள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.
சிறுவர்களின் இந்த கலை விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பித்து மழலை செல்வங்களுடைய விளையாட்டு திறமைகளுக்கு உற்சாகமளிக்குமாறு முன்பள்ளி பொறுப்பாசிரியை எம்.எஸ். பௌசுல் ரூஸி சனூன் வேண்டுகோள் விடுப்பதோடு, நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிக்க அனுசரணை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
2026 ஜனவரியில் இந்த முன்பள்ளியானது தனது 54 வது வயதில் கால் பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.









































No comments