Breaking News

புத்தளத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (09) புத்தளம்.  விஜயகடுபொத,  61 ம் கட்டையின் வீதித் தடுப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வ​ரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் ஐந்நூற்று நாற்பத்தி இரண்டு (542) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.


வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (09)  நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த கெப் (01) சோதனையிடப்பட்டது. அதன்போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்நூற்று நாற்பத்தி இரண்டு (542) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியையும் இரண்டு (02) சந்தேகநபர்களையும் கடற்படையினர்  கைது செய்துள்ளனர் 


கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 24 வயதுடைய புத்தளம், எத்தாளை மற்றும் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், கெப் மற்றும் பீடி இலைகளின் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.






No comments