JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடல் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேற்கு கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் சனிக்கிழமை (27) காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது நடத்தப்பட்டது. 


இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு கடற்கரைச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

 

மேலும், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட 200 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال