JobVibe.lk - Sri Lanka Job Portal

இந்திய பிரதமரின் உயிர் காப்பாற்றப்பட்டதா ? அவரை காப்பாற்றியது யார் ?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சீனாவில்வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும், மயிரிழையில் அந்த திட்டம் தோல்வியடைந்ததாகவும் சில சர்வதேச செய்திகள் கூறுகின்றன. 


இந்திய பிரதமரை சீனாவில்வைத்து கொலை செய்வதன் மூலம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டதாக அந்த செய்தியில் கூறப்படுகின்றது. 


கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்ற மாநாடில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு சென்றிருந்தபோது அவரை அங்கு கொலை செய்வதற்கான திட்டத்தை ரஷ்யாவின் புலனாய்வுத்துறை அறிந்துகொண்டதாம்.  


குறித்த மாநாடு நடைபெற்ற தினத்தில் இந்திய பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாநாட்டுக்கு செல்வதற்காக காலை நேரத்தில் தயாரானபோது ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடமிருந்து மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் ஹோட்டலைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் கூறியதுடன், குறித்த இடத்துக்கு ரஷ்ய அதிபர் நேரடியாக சென்று அவரது வாகனத்தில் இந்திய பிரதமரை மாநாட்டுக்கு அழைத்துச் சென்றதாவும், இதனால் ரஷ்ய அதிபரின் பயணம் சில மணிநேரம் தாமதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.


அமெரிக்காவின் சிறப்புப் படை அதிகாரி ஒருவர் பங்காளதேசின் தலைநகரான டாக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து இந்த திட்டத்தை வகுத்ததாகவும், பின்பு அவர் மர்மமானமுறையில் இறந்துகிடந்ததாகவும் கூறப்படுகின்றது. 


இந்த படை அதிகாரியின் தொலைபேசியை ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பினர் ஒட்டுக் கேட்டதன் அடிப்படையிலேயே இந்த ரகசிய திட்டம் தெரியவந்ததாக கூறப்படுகின்றது. 


இந்த சம்பவம் வெளியே கசியாமல் ரகசியமாக இருந்தது. ஆனால் அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இதன்பின்புதான் இந்த சம்பவம் வெளியே கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


அமெரிக்காவின் திட்டம் சீனாவில் சருக்கியதனால், அதனை மீண்டும் வேறுமுறையில் மலேசியாவில் முயற்சிக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே இந்திய பிரதமர் ஆசியான் மாநாட்டில் கலந்துகொல்வதனை தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. 


இந்த சம்பவத்துக்கு பின்பு ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மூன்று உளவுத்துறைகளும் இணைந்து பயணிப்பதாகவும் கூறப்படுகின்றது. 


தங்களுக்கு கட்டுப்படாத நாடுகளின் தலைவர்களை கொலைசெய்வது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாகும். அதனாலேயே அரபு நாடுகள் அமெரிக்காவின் காலடியில் அடங்கிக் கிடக்கின்றது.  


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال