JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆராச்சிகட்டு பிரதேச மக்களை அச்சுறுத்திய விமானம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) 

ஆராச்சிகட்டு – நல்லதரண்கடுவ பகுதியில் நேற்று இரவே வேளையில் சந்தேகத்திற்கிடமான விமானம் ஒன்று பல முறை தாழ்வாக பறந்ததாக பிரதேச மக்கள் பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.


சனிக்கிழமை (04) இரவு குறித்த விமானம் மிகவும் தாழ்வாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பறந்ததாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


விமானத்தின் சக்கரங்களை கண்களால் காண முடிந்ததாகவும், குறித்த விமானத்தில் இருந்து ஒருவகையான வெளிச்சம் வெளிப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள், குறித்த விமானம் ஏதேனும் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என நினைத்து பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்ததாக தெரிவித்தனர்.


விடயம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பிரிவு, நேற்றைய தினம் ஏற்பட்ட மழையினால் கட்டுநாயக்க விமான நிலையம் நீரில் மூழ்கி இருந்ததாகவும், அதனால் குறித்த விமானம் தரை இறங்க முடியாமையால் சிறுது நேரம் வானில் பறந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال