JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட விவசாய பொருட்களுடன் ஒருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படை கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகப்படும் விவசாய இரசாயனங்களை கொண்டு சென்ற ஒரு லொறியை கைப்பற்றியதுடன் அதில் இருந்த சந்தேக நபர் ஒருவரையும் கடற் படையினர் கைது செய்துள்ளனர் 


கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் வட மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடாத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான லொறி ஒன்றை கண்காணித்து சோதனை செய்தனர் அப்போது சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட தாக சந்தேகப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் கலைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் அடங்கிய ஒரு லொறியை கைப்பற்றியதுடன் அதில் இருந்த ஒரு சந்தேக நபரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர் 


மேற்படி நடவடிக்கையின் மூலம் கடற்படையினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலவில் பகுதியைச் சேர்ந்த 41 வயது உடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன் சந்தை நபர் விவசாய இரசாயன பொருட்கள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال