Breaking News

புத்தளம் கலா ஓயா ஆற்று பகுதி சுத்தப்படுத்தல் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உலக சுற்றாடல் தின தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய புத்தளம் வணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் வணாத்தவில்லு பிரதேச செயலகத்தின் இணைத் தலைமையில் புத்தளம் எலுவண்குளம் கலா ஓயா ஆற்று பகுதி சுத்தப்படுத்தலும் அதன் தூய்மையை பேனுதல் மற்றும் அது தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றது.


மேற்படிச் வேலைத்திட்டத்தில் புத்தளம் எலுவண்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது .







No comments