Breaking News

இஸ்ரேலிய போர் விமானங்களின் நீண்டதூர பயணத்துக்கு யார் உதவியிருப்பார்கள் ?

இஸ்ரேலிலிருந்து சென்று இருநூறுக்கு மேற்பட்ட விமானங்கள் மூலமாக ஈரானின் இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகின்றது. 


இந்த பயணம் நேர்பாதையில் ஜோர்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை கடந்து செல்வதென்றால் இரண்டாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டியும், சிரியா, ஈராக் வான் வழியாக அல்லது செங்கடல் வழியாக சுற்றுப் பாதையில் பயனிப்பதென்றால் அதனையும்விட அதிக தூரம் விமானகள் பயணிக்க வேண்டும்.


தாக்குதல் நடாத்திவிட்டு இஸ்ரேலுக்கு திரும்பி வருவதற்கு மீண்டும் அதே தூரம் எடுக்கும். இது ஆகக் குறைந்தளவு 5,000 KM தூரம் போர் விமானங்கள் பயணிக்க வேண்டும். 


ஆனால் 5,000 km தூரம் பயணிக்கும் அளவுக்கு போர் விமானங்களின் எரிபொருள் தாங்கிகள் பெரியதாக இல்லை. அதாவது போர் விமானங்களின் எரிபொருள் தாங்கிகள் சிறியதாகவே இருக்கும். 


ஆகாயத்தில் வைத்து எரிபொருளை நிரப்புவதென்றாலும், இது 200 விமானங்களுக்கு அவ்வாறு ஒரே தடையில் நிரப்புவது எந்தளவுக்கு சாத்தியமாகும் ?


ஊடகங்கள் என்னதான் கூறினாலும், இஸ்ரேலில் இருந்து பயணித்த 200 போர் விமானங்கள் ஏதோவொரு நாட்டில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பியிருக்க வேண்டும். அதாவது மூன்றாவது நாடு ஒன்றின் உதவியின்றி இவ்வளவு பெரிய தாக்குதலை நீண்ட தூரம் பயணித்து தாக்குதல் நடத்த முடியாது.


அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஸ் விமானத் தளங்களில் எரிபொருள் நிரப்பியிருக்க வேண்டும். 


அத்துடன் ஈரான் பெரிய நிலப்பரப்பினைக் கொண்ட நாடு அதனால் அங்கு மொசாத் ரகசிய தளங்களை நிறுவி அங்கிருந்து ட்ரோன்களை ஏவியதாகவும், ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பினை செயல் இழக்கச் செய்ததாகவும் அறியப்படுகிறது.    


கடந்த காலங்களில் இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான செயற்பாட்டுக் களமாக ஈரானின் வடக்கு எல்லையில் உள்ள அசார்பைஜான் நாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments