Breaking News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு!

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீட முதுகலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இரண்டு நாட்களைக் கொண்ட “Digital Inequality and Social Stratification” எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு; 2025.05.20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கல்கிஸையில் அமைந்துள்ள கல்வி திட்ட நிலையத்தில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் முதுகலைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல்  ஆகியோரது இணை தலைமைத்துவத்தில் இடம்பெற்றது.


அங்குரார்ப்பண நிகழ்வின் தொடக்கத்தில்,கலாநிதி எம். றிஸ்வான் (Secretary, Two-Days Multidisciplinary International Conference 2025 வரவேற்புரை நிகழ்த்தினார். இதையடுத்து இந்தியாவின் சென்னை குருநானக் கல்லூரியின் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் கலாநிதி வேணட் ராஜதுரை  துவக்க உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் நகரில் உள்ள சௌத் பீல்டு கல்லூரியின் முதல்வர் கலாநிதி  அனுராதா ராய் கௌரவ அதிதி உரை நிகழ்த்தினார்.


ஆய்வரங்கத்தின் Conference Chair மற்றும் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் தன்னுடைய உரையில், சமூகத்திலுள்ள டிஜிட்டல் பாகுபாடு, கல்வி மற்றும் தொழில்நுட்பத்திற்கான சம வாய்ப்பின்மை ஆகியவை தொடர்ந்து சமூக அடுக்கமைப்பை உருவாக்கும் மிகப்பெரிய காரணிகளாக உள்ளன எனக் கூறினார். இத்தகைய சிக்கல்களை அணுகுவதற்காக பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


இதையடுத்து, நிகழ்வின் பிரதம அதிதியாக  கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் டாக்டர் யு.எல். அப்துல் மஜீத், Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்அவரது  உரையில், இவ்வாய்வரங்கைப் போல பன்னாட்டு ஆய்வரங்கங்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் global research dialogue உருவாக்குவதற்கான தளமாக  செயல்படுகிறது எனக் கூறினார். மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.


அடுத்து, இந்நிகழ்வின் புவியியல் துறையின்  தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கே. நிஜாமிர்  பிரதான  பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Professor of War and Society மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியரான பேராசிரியர் (டாக்டர்) எம்மானுவேல் ஹெச்.பி.எம். கிரெய்க் (Prof. (Dr.) Emmanuel H.P.M. Kreike), Digital Divide மற்றும் அதன் காரணமாக ஏற்படும் Social Stratification குறித்தும், இந்தப் பிரச்சினைகள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் எதிரொலிப்பதாகவும் , சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணியில் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.


இந்நிகழ்வு, பல்துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனுடன் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அம்சமாக அமைந்தது. இந்த மாநாட்டில் இலங்கையின் பல முக்கியமான பல்கலைக்கழகங்களான கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். மேலும், இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு சர்வதேச கல்வி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் இணைந்து பங்குபெற்றனர்.


ஆய்வரங்கிற்காக 110 க்கும் மேற்பட்ட சுருக்கக் கட்டுரைகள் (abstracts) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை, சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற பல துறைகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.











No comments