Breaking News

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பதவி வகித்தல்

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுக்கு முதல்நாள் நடைபெறுகின்ற கட்டாய அதிஉயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய அனைத்து பதவிகளும் தெரிவு செய்யப்பட்டு மறுநாள் நடைபெறுகின்ற பேராளர் மாநாட்டில் அது அங்கீகரிக்கப்படுகின்றது.  


எனது கேள்வி என்னவென்றால், தலைவர் பதவியை ஒவ்வொரு பேராளர் மாநாட்டிலும் தெரிவு செய்ய முடியுமென்றால், தலைவரால் நியமிக்கப்படுகின்ற ஒவ்வொரு ஊரிலும் உள்ள அமைப்பாளர் மற்றும் ஏனைய பதவிகளை ஏன் ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்க முடியாது ? 


சில இடங்களில் தசாப்தங்களையும் தாண்டி அமைப்பாளர் பதவியை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் மக்களின் செல்வாக்குள்ளவர்களாக அல்லது கட்சியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தால் பருவாயில்லை. 


ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது கட்சியின் செல்வாக்கை தனது சுயநல அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் இவ்வாறு நீண்ட காலங்களுக்கு பொறுப்புள்ள பதவியில் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.  


2008 மாகாணசபை தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக ஜமீலை நிறுத்தியபோது அங்குள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது நிலைமையை சமாளிப்பதற்காக அமைப்பாளர் பதவி ஒருவருக்கு வழங்கப்பட்டது. அவர்தான் இப்போதும் தொடர்ந்தும் அமைப்பாளராக உள்ளார். 


அவ்வாறு அமைப்பாளர் பதவி 2008 இல் வழங்கும்போது சாய்ந்தமருதில் கட்சியின் செல்வாக்கு 90 வீதமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன ? கட்சியின் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பு என்ன ? 


சாய்ந்தமருதில் உள்ள முக்கியஸ்தர்கள் யாரையாவது முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக்கொள்ள முற்பட்டால் அதற்கு முதலாவது தடையாக இருப்பவர் அவர்தான். 


இவ்வாறானவர்கள் சாய்ந்தமருதில் மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ளார்கள். எனவேதான் அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் வழங்கும்போது பதவிக்கான கால எல்லை முக்கியமானது. அவர் திறமையாக செயற்பட்டால் தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால் செயற்பாடுகள் இல்லாதவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்குவது கட்சியை பாதிக்கிறது.  


தொடரும்........

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments