ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.
ஏழாவது தொடர்............
ஒரு தற்கொலை தாக்குதல் நடத்துவதென்றால், போராளிகள் ஊடுருவ முடியாத அல்லது ஊடுருவினால் தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து உயிருடன் மீண்டும் தப்பிச்செல்ல முடியாத உயர் பாதுகாப்பு இடங்களில் மாத்திரமே தற்கொலை தாக்குதல் நடாத்துவதற்கு தீர்மானிப்பார்கள்.
அந்தவகையில் பாலஸ்தீனில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலிய அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவி தற்கொலை தாக்குதல்களை நடாத்தினார்கள். அதுபோல் விடுதலை புலிகளின் கரும்புலிகள் அரச பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவி தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள்.
அதிலும் விசேடமாக யாரும் ஊடுருவ முடியாத கட்டுநாயக்கா விமானத் தளத்துக்குள் ஊடுருவிய கரும்புலி அணியினர், அங்கு தாக்கி அழிக்க வேண்டிய இலக்குகளையும், விமானங்களையும் அழித்துவிட்டு கரும்புலியினர் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் நினைத்தால்கூட கட்டுநாயக்காவிலிருந்து வன்னிக்கு தப்பிச் செல்ல முடியாது.
இவ்வாறு உயர் பாதுகாப்பு பிரதேசங்களில் உள்ள இலக்குகள்தான் தற்கொலை தாக்குதல்கள் நடாத்துவதற்கு பொருத்தமானதாகும். ஆனால் இங்கே சஹ்றான் குழுவினர் தாக்குதல் நடாத்திய இலக்குகளில் தற்கொலை தாக்குதல் நடாத்துவதற்கு என்ன தேவையுள்ளது என்று சிந்திக்க வேண்டும்.
அதாவது யுத்தம் எதுவும் இல்லாத பாதுகாப்பு கெடுபிடிகலற்ற நிலையில், நாடு மிக அமைதியாக இருந்தது. இவ்வாறான சூழ்லில் நாட்டின் எந்த இடத்திலும் எவ்வாறான தாக்குதல்களையும் நடாத்திவிட்டு தப்பிச்செல்லகூடிய நிலைமை இலங்கையில் காணப்பட்டது.
அண்மையில் இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்குள் நீதிபதி முன்பாக கொலை செய்துவிட்டு நீதிமன்ற வளாகத்தைவிட்டு தப்பிச்சென்றதனை இந்த நாடே அறியும்.
இவ்வாறான நிலையில் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற இலக்குகளில் தற்கொலை தாக்குதல் நடாத்தவேண்டிய எந்த தேவையும் இருக்கவில்லை. அப்படியிருந்தும் சஹ்றான் குழுவினர் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்ற கேள்வியுடன் பல சந்தேகங்கள் எழுகின்றது.
அதாவது இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு உண்மையில் தற்கொலை தாக்குதல்களுக்காகத்தான் சென்றார்களா ?
அவ்வாறென்றால் மூளைச்சலவை செய்த சஹ்றான் தற்கொலைக்கு எப்படித் துணிந்தார் ?
அல்லது குண்டுகளை வைத்துவிட்டு திரும்பிவர சென்றபோது குண்டினை கொண்டு சென்றவர்களுக்கு தெரியாமல் திட்டமிட்டு குண்டுகளை ரிமோட் கொன்ரோல் மூலமாக வெடிக்க வைக்கப்பட்டதா ?
சஹ்றான் குழுவினர் தீவிர போக்குடையவர்கள் என்பதனால் இவர்கள் உயிருடன் இருப்பது நாட்டுக்கும், தங்களுக்கும் ஆபத்தாக அமைந்துவிடும் என்பதனாலும், இவர்களுக்கு உதவி செய்த சக்திகளின் ரகசியம் வெளிப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலும் இவர்களை தமது அரசியல் தேவைக்காக நன்றாக பயன்படுத்திவிட்டு கூண்டோடு அழித்துவிட நினைத்தார்களா ?
தொடரும்...........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments