(க.மகாதேவன்)
வரலாற்று சிறப்பு வாய்ந்த சுமார் 200வருடங்களைக் கடந்து, புகழ் பெற்ற புனித சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருப்பலி ஒப்புக் கொடுத்தல் மற்றும் விஷேட பூஜைகள் (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு திருச்சொரூபத்தைத் சுமந்த வீதி பவனி கடற்கரை வீதியாக வலம் வந்தது. தேவாயத்தின் பூஜைகளில் வணக்கத்துக்குரிய பங்குத்தந்தை அருட்திரு ஜோஸப் ஜீஸஸ் மற்றும், அருட் தந்தை வணக்கத்துக்குரிய குயின்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உடப்பு இந்து மக்களும் கலந்து கொண்டு விழாவை மிகவும் சிறப்பாக சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










