JobVibe.lk - Sri Lanka Job Portal

மயோன் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரப் வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மயோன் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 


அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.


தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் குறிப்பாக எமது அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இதனை ஏற்பாடு செய்திருந்ததாக மயோன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.


அத்துடன் வீண்விரயங்களை தவிர்த்து, முன்மாதிரியாக நேரடியாக வைத்தியசாலையிலேயே இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு உதவிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் நிகழ்வில் பங்குபற்றி இரத்த தானம் செய்தவர்களுக்கும் ஏற்பாடுகளை முன்னின்று நடாத்திய உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال