கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி வந்த பயணிகள் பேருந்து விபத்து
(உடப்பு க.மகாதேவன்)
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி வந்த பயணிகள் பேருந்து ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து ஒன்று சனிக்கிழமை (21) பகல் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, முச்சக்கர வண்டி செலுத்திய சாரதி காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மாரவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Comment
No comments