கற்பிட்டி சமூர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு மரவள்ளி தன்சல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி சமூர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் நேற்று (22) கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு சமைத்த மரவள்ளிகிழங்கு தன்சல் வங்கியின் முகாமையாளர் தினுஷா தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில இந்திக ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை கற்பிட்டி சமூர்த்தி வங்கியின் பிரிவிற்குட்பட்ட சகல சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகதர்களும் வழங்கியதுடன் நிதி உதவிகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments