Breaking News

ஜனாஸா அறிவித்தல் - பாலாவி நாகவில்லு வசிப்பிடமாகக் கொண்ட மக்பூலா (பமீசா ஆசிரியை) காலமானார்.

மன்/ எருக்கலம்பிட்டி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது நாகவில்லு  வதிவிடமாக கொண்ட  மக்பூலா (பமீசா ஆசிரியை)  (P/Erukkalampiddy MMV) இன்று (24)  காலமானார்.


இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிவூன்.


அன்னார் அஜ்மல்டீன் அவர்களின் அன்பு மனைவியும்  காலஞ்சென்றவர்களான  ஓய்வு பெற்ற அதிபர் அமானுல்லா, ஆசிரியை ஹம்ஷா ஆகியோரின் மகளும், மற்றும் நஜ்மி  ஆசிரியர், அல்பர் , கடையாமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட  மஹீஸா ஆசிரியை,  றயீஸா  ஆசிரியை ,  அரூஸா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும்,கற்பிட்டி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். ரபீக் (JP) அவர்களின் மைத்தினியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  நாளை (25/10/2023) காலை 9மணிக்கு நாகவில்லு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்வாசிரியைக்குக அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.



தகவல்

A.M நஜ்மி ஆசிரியர்

 (பு/ எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா விந்தியாலயம்)  - நாகவில்லு




No comments

note