Breaking News

கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா!

புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணி மனைக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 01 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா வெள்ளிக்கிழமை (29) பாடாசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


பாடாசாலையின் அதிபர் எஸ்.எஸ்.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிமனையின் தமிழ் மொழி பாட பிரதான ஆசிரியர் ஆலோசகர்  திருமதி எம்.பீ. கீதா பத்திராஜ பிள்ளை  கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ். சேகுஅலாவுதீன், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க்  எச்.எச்.எம்.நஜீம் (ஷர்கி) மற்றும் ஓய்வு பெற்ற  முன்னாள் அதிபர் எம்.எம்.பீ. சுபைர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


தரம் 1 புதிய மாணவர்களை தரம் 2 மாணவர்கள் மலர் தூவி, மாலை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்களும் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





















No comments

note