மொ /அல் இர்ஷாத் பாடசாலையில் சேவையாற்றும் ஏ.ஜே.எம். ரமீஸ் ஆசிரியரின் முயற்சி மற்றும் வேண்டுளுக்கிணங்க எப்.சி.டி நிறுவனத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவுப் பொதிகள் கையளிக்கும் நிகழ்வு (28) ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எம் முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு மெதகம பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் எம்.எப்.சி.டி நிருவன பணிப்பாளர், திட்ட முகாமையாளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிப்பித்தனர்.
இவ்வைபவத்தினை சிறப்பாக நடாத்த உதவி செய்த பாடசாலை ஆரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மெதகம ஜனாஸா நலன்புரிச் சங்கம் என்பவற்றுக்கு அதிபராகிய எம்.எச். எம் முபாரக் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்.
ஏ.எச். எம் சிஹார்
பகினிகஹவெல, மொனறாகலை

.jpeg)
.jpeg)
.jpeg)
