JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையில் பணத்தாளில் பரவிய கொரோனா-அதிர்ச்சி தகவல் அம்பலம்

MADURAN KULI MEDIA 
04/11/2020


கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தனியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி-1.42 ரக தொற்றுப்பிரிவு பரவியிருப்பதாக சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை கொரோனா கொத்தனி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.

எனினும் அதனை மிஞ்சிய பேலியகொடை மீன்சந்தை கொத்தனி ஒக்டோபர் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து இன்றுவரை பாரிய அளவில் வியாபித்து வருகின்றது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال