Breaking News

விசாரணைக்கு ஆஜராகினார் மைத்திரி

MADURAN KULI MEDIA 
17/10/2020

முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகியுள்ளார்.

அவர் ஆஜராகின்ற 4ஆவது தடவை இதுவாகும்.
ஏற்கனவே 03 தடவைகள் குறித்த ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ஆஜராகி சாட்சியம் வழங்கியிருக்கின்றார்.

இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகி சாட்சிளம் அளிப்பதற்கான அழைப்பினை அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)





No comments