சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் - அமைச்சர் அலி சப்ரி
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்...
´சில விடயங்களை மறைத்து வைத்திருக்க முடியாது. பூப்போன்ற சிறுவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதற்குரிய தண்டணையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். அதற்கான சட்டங்களை இயற்ற முடியும்´
அமைச்சரவை அனுமதியுடன் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்´ என்றார்.
No comments