Breaking News

வேலியே பயிரை மேயலாமா ? சட்டத்தை போதிக்கவேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா ?

ஒலிபெருக்கியை பாவித்து தேர்தளுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடாத்துவதற்காக பொலிசார் அனுமதி வழங்குகின்றபோது குறித்த நேரத்துக்குள் பொதுக் கூட்டத்தை முடிக்கவேண்டும் என்பது பொலிசாரின் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

குறிப்பாக நல்லிரவு பன்னிரெண்டு மணியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பது பொலிசாரின் கட்டளையாகும். அதற்கு உடன்பட்டவாறே நாங்கள் அனுமதியைப் பெற்று ஒலிபெருக்கி பாவித்து பொதுக்கூட்டத்தினை நடாத்துகின்றோம்.  

அவ்வாறு பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைவாக நல்லிரவு பன்னிரண்டு மணியுடன் பொதுக்கூட்டத்தினை நிறைவு செய்தால் மட்டுமே நாங்கள் சட்டத்தினை மதிப்பதாக அமைகின்றது. 

ஆனால் பொலிசாரினால் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டி தொடர்ந்து பொதுக்கூட்டம் நாடாத்துகின்றபோது நாங்கள் சட்டத்தினை மீறுகின்றோம். அவ்வாறு மீறுகின்றபோது ஒலிபெருக்கியை அணைக்குமாறு அறிவுறுத்துவது பொலிசாரின் கடமையாகும்.

அவ்வாறு பொலிசாரின் அறிவுத்தலை மீறினால் அவர்கள் ஒலிபெருக்கியின் வயர்களை கழட்டுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். 

அவ்வாறு பொலிசார் ஒலிபெருக்கியின் வயரை துண்டிக்கும்வரைக்கும் இருந்துவிட்டு தங்களது அல்லக்கைகள் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தில் பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்து மக்கள் முன்பாக தங்களை வீரர்களாக காண்பிக்க முற்படுவதும் ஒரு அரசியல் நாடகமாகும்.  

அதாவது நாங்கள் சட்டத்தை மீறியவாறு பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்வது ஒன்றும் வீரமல்ல. அது மக்கள் முன்பாக காண்பிக்கும் நாடகமாகும். வீரமென்றால் எமது மக்களுக்கு எதிராக எத்தனையோ அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றது. அப்போது கோழைகளாக இருந்துவிட்டு பொலிசாரிடம் வாய்த்தர்க்கம் செய்வது மட்டும் வீரமாகாது.

மக்களை வழிநடாத்துகின்ற நாங்கள் முதலில் சட்டத்தினை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரத்துக்கு வந்தபின்பு மக்களுக்கு சட்டத்தினை போதிக்க முடியும். இல்லாவிட்டால் அவ்வாறு அறிவுறுத்துவதற்கு எங்களுக்கு எந்த தகுதியும் இருக்காது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது



No comments