JobVibe.lk - Sri Lanka Job Portal

மாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

09 07 2020
     BREAKING NEWS


இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் 
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேபோல், இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர் 
எஸ்.எம்.எம் ஸபாக்



Previous Post Next Post

نموذج الاتصال