55 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆனமடு மற்றும் கல்பிட்டி வைத்தியசாலைகளுக்கு 55 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
.
சத்திர சிகிச்சை உபகரணரங்கள், அவசர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்கள் , டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரம் உட்பட நவீன வைத்திய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் இவற்றினை கையளித்தார்.
வடமேல் மாகாண வைத்தியசேவை பணிப்பாளர் என். பரீதும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
நன்றி - புத்தெழில்

No comments