எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 15,328 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 599,042 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக 614,370 பேர் வாக்களிக்க துகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல்கள் காரியாலயம் அறிவித்துள்ளது.
புத்தளம் தொகுதியில் மாத்திரம் 9555 பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி - புத்தெழில் -
Tags
அரசியல்
