JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், மதுரங்குளி நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட ரபீக்கா உம்மா அவர்கள் காலமானார்.

புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், மதுரங்குளி நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட  ரபீக்கா உம்மா அவர்கள் இன்று (17} வியாழக்கிழமை காலமானார்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிவூன்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஹஸன், ஆசியா உம்மா ஆகியோரின் அன்ப  மகளும், காலம் சென்ற அப்துல் வஹாப் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான  ஹஸன் ரசீத், ஹஸன் வாஹித், ஹஸன் முனாப், ஹஸன் பாரூக் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரிஸ்வியா, பசீஹா, ஹினாயா, ஜெஸ்மின், சதீகா, அஷ்ஷெய்க் அன்வர் சதாத் (மனாரி), ரஸ்மியா ஆகியோரின் அன்புத் தாயும்,
இஸ்மாயில் ஹாஜியார், பீராவுத்தர் அன்சார், பாலாவி தபால் அலுவலகம் இபுன், இப்றாஹீம், அஹ்மத் கபீர், புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலைக்கு முன்னாலுள்ள வீடு சவூதியில் வசிக்கும் ஹஸ்லிம் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம் இன்ஷா அள்ளாஹ்! இன்று (17) வியாழக் கிழமை, இஷாத் தொழுகைக்குப் பின்னர், நல்லாந்தழுவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار


-தகவல்:
மகன் - அஷ்ஷெய்க் அன்வர் சதாத் (மனாரி)






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال