எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மொங்கோலியா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
புத்தளம் நகரை பிரதிநிதித்துவப்படுத்தி, UNCCD ஏற்பாடு செய்துள்ள மேயர்கள் மாநாட்டில் (Mayor’s Forum) அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, புத்தளம் மாநகர முதல்வரும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர முதல்வரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விசேடமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

