JobVibe.lk - Sri Lanka Job Portal

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்! - பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயம், சகோதரத்துவம், நீதி, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான வழிகாட்டியாகும்.

குறிப்பாக, பல்வேறு இனங்களும் மதங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் போதித்த மனிதநேயத்தையும், அயலவர் உரிமைகளையும், பிற சமூகங்களின் கண்ணியத்தையும் மதிக்கும் பண்பாட்டையும் நாம் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் மூலம், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

இந்த புனித நாளில், இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மக்களிடையேயும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும், எமது தாய்நாட்டில் நிரந்தர அமைதியும் சுபீட்சமும் நிலவவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள்!

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال