JobVibe.lk - Sri Lanka Job Portal

எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு.

கடந்த 24.07.2026 அன்று மூன்று பேர் அடங்கிய புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.  

அதில், குழு தலைவராக M.K. Saman Sri Ratnayake நியமிக்கப்பட்டு, உறுப்பினர்களாக M.B. Rohana Pushpakumara, K. Thavalingam ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த இருவரும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் இவ்வாறான எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு ஓர் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினரை நியமித்திருக்க வேண்டும்.  

ஏற்கனவே அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்ற விமர்சனம் இருக்கின்ற நிலையில், இவ்வாறு தொடர்ந்து ஓர் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்படுவதானது இன்றைய ஆட்சியாளர்களின் சமத்துவக் கோட்பாட்டுக் கொள்கைக்கு முரணான ஒன்றாகும்.

ஓர் சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவம் செய்தல் வேண்டும் என்று குறிப்பிடுவதனை சிலர் ஓர் இனவாதமாக சித்தரிக்கலாம். ஓர் இனத்தின் உரிமையினைக் கோருவதனை இனவாதமாக கருத முடியாது. மாறாக ஓர் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்படுகின்ற போதுதான் அதனை இனவாதமாக கருத முடியும். 

இது விவகாரமாக முஸ்லிம் மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் எத்தனையோ கட்சிகள் மற்றும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இருக்கின்ற நிலையில், இவ்வாறான விடயங்களில் அனைவரும் மௌனமாக உள்ளனர். 

தேர்தலில் யாரையும் ஆதரிக்கலாம், அது வேறு விடயம். ஆனால் எல்லை நிர்ணயக் குழு போன்ற விவகாரங்களை சாதாரணமாக கருதாமல், தூரநோக்கில் முஸ்லிம் சமூகம் சார்பாக ஓர் உறுப்பினரை நியமிப்பதற்கு இன்றைய அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். 

உரிமைகள் அல்லது சலுகைகள் ஆட்சியாளர்களினால் தந்திரமாக மறுக்கப்படுகின்றபோது, அதனை எதிர்க்காமல் வாய்மூடி மௌனியாக இருப்பதானது, ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவே அமையும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال