விருதோடையச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் கரீம் (ஜலீல்) அவர்களின் அன்பு பேத்தி யாஸ்மின் அவர்கள் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் கனமூலையைச் சேர்ந்த அலிஅக்பர் அர்சாத் அவர்களின் அன்பு மனைவியும், ராசிக், யமீனா ஆகியோரின் அன்பு மகளும், ஆரிஸ் அப்ஸா ஆகியோரின் அன்புத்தாயும், பஸாஹிர், பாஹிர், சக்கீர், சாதிர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரயிஸ் ஆசிரியர் (விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயம்), வாரிஸ் ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (29) புதன்கிழமை காலை 8. 00 மணியளவில் விருதோடை சேனைக்குடியிருப்பு ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار
